Sunday, August 18, 2013

உள்ளத்தில் நல்ல உள்ளம்

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்கா தென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug